திண்டுக்கல் கோர்ட்டில் நிலவேம்பு கசாயம்

திண்டுக்கல், நவ. 14:  திண்டுக்கல் மாவட்ட கோர்ட் வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழக்கறிஞர்கள் சங்கம், கோர்ட் ஊழியர்கள் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை வகிக்க, வழக்கறிஞர் சங்க தலைவர் பாண்டியராஜன், செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் நீதிபதிகள் சிங்கராஜ், மதுரசேகரன், கருணாநிதி, தீபா, நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜயகுமார் செய்திருந்தார்.

Related Stories: