திண்டுக்கல், நவ. 14: வாடிக்கையாளர் பெயரில் கடன் மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் வங்கி மேலாளரின் ஜாமீன் மனுவை 5வது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் கோர்ட் உத்தரவிட்டது. திண்டுக்கல் ஆர்எம் காலனியில் உள்ள அலகாபாத் வங்கியில் மேலாளராக பணியாற்றியவர் சொர்ணபிரியா. இவர் வங்கியில் கணக்கு வைத்திருந்த திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன், மகேஸ்வரன், கருணாகரன், கதிரேசன், கோனூரை சேர்ந்த திம்மையா, காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம், சென்னையை சேர்ந்த குமரேசன், யாசர் அராபத் ஆகியோர் பெயரில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் வரை கடன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதில் குமரேசன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சொர்ணபிரியா மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.