சிவகங்கை, நவ.14: சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொ) ராமநாதன் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் என மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு வழங்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது.