முத்திரை கொல்லர் பணிக்கு டிச.2ல் எழுத்துத் தேர்வு

திருப்பூர், நவ.14: திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லெனின் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் துறையில் கோவை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிச.,2ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் எழுத்து தேர்விற்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச்சீட்டு பெறப்படாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், அறை எண் 645 மற்றும் 646, 6-வது தளம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியில் செயல்படும் அலுவலகத்தை வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நேரில் அணுகி நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: