திருப்பூர், நவ.14: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் குழி தோண்டுதல், மின் கம்பம் நடுதல், மின் கம்பங்களை எடுத்து செல்லுதல் அவசர வேலைகளை செய்தல் போன்ற பணிகளை செய்வதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.380 வழங்க உத்தரவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், தீபாவளிக்கான கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.