பாலக்காடு அருகே ஆட்டோ டிரைவரை கொன்ற 4 பேர் கைது

பாலக்காடு, நவ. 14: பாலக்காடு அருகே முட்டிக் குளங்கரையை சேர்ந்தவர் ஷமீர்.ஆட்டோ டிரைவர். இவர் தனியாக ஆட்டோ ஓட்டி வந்த போது பாலோடு பகுதியில் வாலிபர்கள் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி ஷமீரை கொலை செய்து விட்டு கடந்த 8ம் தேதி தப்பியோடினர். இது தொடர்பாக எஸ்.பி., தெபேஸ்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டு பாலக்காடு ஹேமாம்பிகா நகர் எஸ்ஐ பிரேமானந்தர் தலைமையில் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஷமீரை கொன்ற கம்பர பகுதியை சேர்ந்த ரபிஸ் (19), அஜ்மல் (எ) முனீர் (23) சுபைப் (18), ேமப் பரம்பை சேர்ந்த கம்ப் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: