பொள்ளாச்சி, நவ. 14: பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சூரசம்ஹார திருவிழா மற்றும் கந்த சஷ்டி விழா, கடந்த 8ம் தேதி பக்தர்கள் காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, தினமும் நான்கு கால அபிஷேக ஆராதனையும், மாலையில் சொற்பொழிவும் நடந்தது.