சென்னிமலையில் தேன் எடுத்த தொழிலாளி தேனீக்கள் கொட்டி பலி

சென்னிமலை,நவ.14: சென்னிமலை அருகே கிராமத்து தோட்டத்தில்  தேன் கூட்டில் தேன் எடுத்த தொழிலாளி தேனீக்கள் கொட்டியதில் பரிதாபமாக இறந்தார். சென்னிமலை அருகே உள்ள துலுக்கம்பாளையத்தில் சுப்பிரமணியன் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேன்கூடு இருந்தது. ஊத்துக்குளி அருகேயுள்ள ஜேடர்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி கருப்புசாமியும் (58) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் இரவு இங்குள்ள தேன்கூட்டில் தேன் எடுப்பதாக மரத்தில் ஏறியுள்ளனர். அப்போது தேனீக்கள் கொட்டியதில் கருப்பசாமி மயக்கம் அடைந்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  இதுபற்றி தகவலறிந்த விவசாயி சுப்பிரமணி சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் . போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கருப்புசாமி பரிதாபமாக இறந்து கிடந்தது தெரிந்தது . போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories: