பவானியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

பவானி, நவ. 14: பவானியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.  பவானி சங்கமேஸ்வரர் கோயில் முன் தொடங்கிய இந்த ஊர்வலத்தை பவானி டிஎஸ்பி சார்லஸ், ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் செயலாளர் செந்தாமரை ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.  

இந்த ஊர்வலத்தில், சாலை விபத்துகளில் உயிரைப் பாதுகாக்க தலைக்கவசம் அணிதல் அவசியம், விபத்துகளில் உயிரிழப்பு, உடலுறுப்பு சேதம் தவிர்க்க இரு சக்கர வாகனத்தில் ஓட்டுவோரும், உடனமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஊர்வலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, பவானி எஸ்ஐ செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: