திமுக இளைஞரணி சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

ஈரோடு, நவ. 14: திமுக இளைஞரணி சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டி வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பவானி கே.ஏ.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டி வரும் 17ம் தேதி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

போட்டிகளை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். நடுவராக பசும்பொன் ரவிச்சந்திரன் பங்கேற்கிறார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.மேலும், மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: