மதுராந்தகம், நவ. 14: சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் (30). இவரது மனைவி பாத்திமா (28). இவர்களது மகள் யாசின் (7). 3ம் வகுப்பு மாணவி. பாத்திமாவின் அண்ணன் மீரான் மொய்தீன் (50). இவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர். நேற்று மாலை மீரான் மொய்தீன் தனது தங்கை மகளான யாசின் மற்றும் உறவினர்களான ஜமால் மொய்தீன் (50), ஷகீனா (40), முகமது (45), காஜா (40), மரியம் (35) மற்றும் முகமது அபி (4) ஆகிய 7 பேருடன் சென்னையில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு, காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.