உத்திரமேரூர், நவ. 14: அரும்புலியூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காததால், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. உத்திரமேரூர் அருகே அரும்புலியூர், குருமஞ்சேரி, பினாயூர், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, பழவேரி, கரும்பாக்கம், களியப்பேட்டை, காவித்தண்டலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது இல்ல திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள், சுயஉதவி குழு கூட்டங்கள், கிராம சபை கூட்டம் போன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக அரும்புலியூர் கிராமத்தில் கடந்த 2009ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.