தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாப சாவு

பெரம்பூர் நவ. 14: காசிமேடு, சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இவருக்கு 18 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு இருந்தார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர், சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி சரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே, மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: