ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆலந்தூர் தில்லை கங்கா நகர் சுரங்கபாதை அருகே நடந்தது. கூட்டத்துக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், எம்.எஸ்.கே.இப்ராஹிம் த.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டுபிரகாஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முகமதுஅலி ஜின்னா, காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன் பேகையில், ‘‘இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தகுதி நமது தலைவர் ஸ்டாலினிடம் உள்ளதால் பல்வேறு தலைவர்கள் அவரை சந்தித்தவண்ணம் உள்ளனர். நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக நாம் உழைப்பது நமது கடமை. அதே போல் தமிழ்நாட்டில் நமது தலைவர் ஸ்டாலினை அரியணையில் அமர்த்திட சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்றார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களை திமுக உறுப்பினராக்க வேண்டும்’’ என்றார்.