மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

மார்த்தாண்டம், நவ.14 : மார்த்தாண்டம் அருகே பாகோடு பனவிளையை சேர்ந்தவர் ஜெனித்தா(22). பி.இ பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் சுபின்(28). கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 9ம்தேதி இருவரும் வீட்டைவிட்டு மாயம் ஆகினர். பின்னர் பெந்தேகொஸ்தே சர்ச் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஜெனித்தாவை பெற்றோர் தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்தும், அவர் தன் காதல் கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறி அவர்களை ஒன்றாக சேர்த்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: