1.10 லட்சம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

நித்திரவிளை, நவ 14: நித்திரவிளை அருகே ஆலவிளையை சேர்ந்தவர் டான்சர் கெமி.  மினிபஸ் உரிமையாளரான இவர் குமரிமாவட்ட மினிபஸ் உரிமையாளர் சங்க தலைவராக உள்ளார். கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் பத்மகுமார். பா.ஜ மாவட்ட செயற்குழு உறுப்பினர். இவர்கள் இருவரும் நேற்று மதியம் மார்த்தாண்டத்திலிருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் காப்புக்காடு பகுதியில் வரும் போது சாலையோரம் ஒரு பர்ஸ் கிடந்தது. அதை அவர்கள் எடுத்து பார்த்தனர். அப்போது பர்சில் 1 லட்சத்து பத்தாயிரம் இருந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் பர்சின் இருந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டனர். எதிர் முனையில் ஒரு பெண் பேசினார். அவர் தூத்தூர்  செயின்ட் தோமஸ் பகுதியை சேர்ந்த ரெஜின் மனைவி ஆனி(40)என்பதும், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு வங்கியில் காசோலையை மாற்றி விட்டு வரும் போது பணத்தை தொலைத்ததும் தெரிய வந்தது.  இதையடுத்து பணத்தை கண்டெடுத்தவர்கள் நித்திரவிளை காவல் நிலையம் சென்று ஆய்வாளர் அந்தோணியம்மாள் முன்னிலையில் ஆனியிடம் பணத்தை ஒப்படைத்தனர். ஆனி பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த டான்சர் கெமி, பத்மகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories: