நாகர்கோவில், நவ.14: குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளுக்கும் கோமாரி நோய் பரவுவது கால்நடை வளர்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குமரி மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை தடுக்க கோமாரி தடுப்பூசி போடும் பணி கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்தது. இந்த நிலையில் தற்போது பல்ேவறு பகுதிகளில் கோமாரி நோய் கால்நடைகளை தாக்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக நாகர்கோவில் பார்வதிபுரம், பெருவிளை பகுதியில் தடுப்பூசி போடப்பட்ட மாடுகளுக்கும் இந்நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. கால் மற்றும் வாய்களில் புண், அதனால் கால்நடைகள் தண்ணீர் குடிக்காமல் நிற்கின்ற நிலை உள்ளது. இந்த கால்நடைகளை பராமரிக்க தினசரி 300 வரை செலவிட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பாபு ஆன்டனி நாகர்கோவில் கால்நடைத்துறை தலைமை மருத்துவர், குமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து நேற்று மனு அளித்தார். அந்த மனுவில், பார்வதிபுரம், பெருவிளை கால்நடை மருத்துவமனை எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 4 பசு மாடுகள், 2 கன்றுகுட்டிகள் வளர்த்து வருகிறேன். கோமாரி நோய் தடுப்பூசி முறையாக போட்டு வருகிறேன்.