சிறப்பு குழந்தைகளுக்கான மாவட்ட கலைப்போட்டிகள்

நாகர்கோவில்,நவ.14: நாகர்கோவிலில், நாகர்கோவில் இன்னர்வீல் கிளப், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியன இணைந்து, சிறப்பு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி மற்றும் தனித்திறன் போட்டிகள் நடத்தினர். போட்டியை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துணை இயக்குநர் கதிர்வேலு தொடங்கி வைத்தார்.  ஓவியப்போட்டி 1 முதல் 10 வயது வரையிலும், 11 முதல் 15 வயது வரையிலும்  நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து, 33 சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை இன்னர் வீல் கிளப் தலைவி மரிய டெல்பினா, செயலாளர் கனகா பிரதீப் மற்றும் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: