கூலி தொழிலாளி சாவு

வில்லியனூர், நவ. 13: வில்லியனூர் மூர்த்தி நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (32). கூலித் தொழிலாளியான இவருக்கு பிரியா (28) என்ற மனைவி உள்ளார். நேற்றிரவு  தண்டபாணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர் தண்டபாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தண்டபாணி மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: