பன்றிகளால் ஆபத்து

ராமநாதபுரம் நகருக்குள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பன்றிகள் வளர்க்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து பன்றி வளர்ப்பவர்கள் பன்றிகளை பிடித்து விற்பனை செய்ததுடன், நகராட்சி பகுதிகளை விடுத்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று வளர்த்தனர். இதனால் நகரில் பன்றிகள் தொல்லை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நகரில் எங்கு பார்த்தாலும் சாக்கடை கால்வாய்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

Related Stories: