தொண்டி, நவ.12: தொண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போட்டி நடந்தது. முஸ்லீம் கல்வி வளர்ச்சி சங்க தலைவர் கமால்பாட்சா தலைமை வகித்தார். ஆங்கில பேச்சு போட்டியில் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பளி மாணவி அசிமா முதல் பரிசையும், ஆர்.எஸ்.மங்கலம் ஹேலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவி மோனிகா இரண்டாம் பரிசையும், ராமநாதபுரம் வேலுமாணிக்கம் பள்ளி சேக் இபுராஹிம் மூன்றாம் பரிசையும் பெற்றனர். தமிழில் முத்துப்பட்டினம் பள்ளி மாணவி ஜோசி அபர்ணா முதல் பரிசையும், தினையத்தூர் அரசு பள்ளி மாணவன் பூபாண்டி இரண்டாம் பரிசையும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசும் ரொக்கமும் வழங்கப்பட்டது. பிரமிளா நன்றி கூறினார்.