மதுரை, நவ. 12: அலங்காநல்லூர் பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்ட 8 பேருக்கு ரூ.46 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில், சிலர் வீடுகளுக்குரிய மின் இணைப்புகளிலிருந்து மின்சாரத்தை திருடுவதாக, மின்வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், இப்பகுதியில் உள்ள 2334 மின் இணைப்புகளை 26 மின் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.