பேரையூரில் திமுக சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை

பேரையூர், நவ. 12: மதுரை மாவட்டம், பேரையூர் பேருந்துநிலையத்தில் திமுக சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில், பேரையூர் பேரூர் கழக செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

பின்னர் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு முன்னெச்செரிக்கையாக கைகளை கழுவி சுத்தமாக பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆலோசனை வழங்கினார்.  இதில் மாவட்ட இளைஞரணி பாண்டிமுருகன், பேரையூர் பேரூர் திமுக நிர்வாகிகள் பாண்டியன், வருசைமுகம்மது, செல்வம், கருப்பையா, முருகன், மணிகண்டன், இளைஞரணி சாதிக் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: