எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்

மதுரை, நவ. 12: எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மதுரை நெல்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜியாவுதீன், செயலாளர்கள் சாகுல்ஹமீது, சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரையில் நவம்பர் 17ல் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்துவது, இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதியை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி டிசம்பர் 6ம் தேதி மதுரை ஒபுளாபடித்துறை, மேலூர் ஆகிய 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: