ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பு போன்று ஊர் பெயர் இல்லையா?

திருச்சி, நவ.8: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 13.6.2018 அன்று நடந்த தமிழ் வளர்ச்சி மானிய கோாிக்கையில் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சாிப்பை போன்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று தொிவித்துள்ளார்.அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஊர் பெயர்களின் பட்டியல் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையினாலான ஆலோசனைக்குழுவில் ஏற்பளிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆணையினை செயற்படுத்தும் வகையில் 2018 நவம்பரில் மாநில அளவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் தலைமையில் முதற்கட்ட குழுக்கூட்டம் நடை பெற இருப்பதால் வரும் 12ம் ேததிக்குள் ஊர் பொதுமக்கள், தமிழறிஞர்கள் திருச்சி மாவட்டத்தில் தமிழ் உச்சாிப்பை போன்றே ஆங்கில உச்சாிப்பும் அமைய பெறாத ஊர்களின் பெயர் பட்டியலை தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நோிலோ, அஞ்சல் வழியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ (0431-2401031) விரைவில் அளித்திடுமாறு திருச்சி கலெக்டர் ராஜாமணி ெதாிவித்துள்ளார்.

Related Stories: