ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அரசு பஸ்களிலேயே செல்ல விரும்பியதால் திருச்சி மத்திய பஸ்நிலையம் பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில் அரசு பஸ்களில் பிபி, எக்ஸ்பிரஸ், இடைநில்லா பேருந்து என்ற போர்வையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. எனவே பெரும்பாலான பயணிகள் தாங்கள் ஏமாற்றப்படுவது கண்டு பணியிலிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் ரயில்வே இடத்தில் ஆம்னி பஸ்நிலையம் அமைக்கப்பட்டதால் மத்திய பஸ்நிலையத்தில் ஆம்னி பஸ்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி முற்றிலும் தவிர்க்கப்பட்டது.