எடையூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் எழுதிய புத்தகம் வழங்கல்

முத்துப்பேட்டை, நவ.8: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம், எடையூர் அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய புத்தகம் வழங்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பரீட்சைக்கு பயமேன் என்ற வழிகாட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பாஜக மாவட்ட தலைவர் பேட்டை சிவா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தாஹிர், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய புத்தகத்தை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பாஜக ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் தோலி செல்வம், நிர்வாகி பேட்டை பாலா  மற்றும் ஆசிரியர்கள், பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பரீட்சைக்கு பயமேன் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான சிவசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: