முத்துப்பேட்டை, நவ.8: முத்துப்பேட்டை அருகே பைக் மோதி விவசாயி படுகாயமடைந்தார்.முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பாராக்குளம் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி(42). விவசாயியான இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த ராஜராஜசோழன் ஓட்டி வந்த பைக் சூரியமூர்த்தி மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.