பொதுமக்களுக்கு தவ்ஹீத் ஜமாத் நில வேம்பு

கசாயம் வழங்கல்முத்துப்பேட்டை, நவ. 8: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நில வேம்பு கசாயம் விநியோகம் நிகழ்ச்சி கிளை தலைவர் முகமது யூசுப் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைத்தெரு, பஸ் ஸ்டாண்ட், கீழத்தெரு பகுதியில் பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகளுக்கு டெங்கு மற்றும் காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மண்டல பொறுப்பாளர் சபீர் அகமது, மாவட்ட பேச்சாளர் யூசுப்கான், கிளை துணைச்செயலாளர் கமருதீன், தொண்டரணி  செயலாளர் சிராஜ்தீன், மாணவரனி செயலாளர் முஷ்ரப், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: