தி.பூண்டி கட்டுனர் சங்க கூட்டத்தில் cதகட்டூர் ஆசிரியருக்கு மழைஞானி பட்டம்

திருத்துறைப்பூண்டி, நவ. 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய கட்டுனர் சங்கம் திருத்துறைப்பூண்டி மையத்தின் கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் புதிய தலைவர் பொறியாளர் மாதவன் தலைமை வகித்தார். தகட்டூர் ஆசிரியர் செல்வகுமார் கலந்து கொண்டு வடகிழக்கு பருவமழை எனும் தலைப்பில் பேசுகையில், இந்த வருடம் தமிழகத்தில் சராசரியை விட 25 சதவீதம் கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார். கூட்டத்தில் சாசன தலைவர் பொறியாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், கைலாசநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகட்டூர் ஆசிரியர் செல்வகுமாருக்கு மழைஞானி எனும் பட்டம் வழங்கப்பட்டது.

முடிவில் செயல் பொறியாளர் பீட்டர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொறியாளர் துரைராயப்பன் செய்திருந்தார்.

Related Stories: