தஞ்சை, நவ. 8: தஞ்சையில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 33வது பொது பேரவை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தங்க.பிரபாகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தரும.கருணாநிதி, தண்டாயுதபாணி, கலியமூர்த்தி, ஹெலன்ஜாய்ஸ், மலர்கொடி, சுலேகா முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் நவநீதகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். உறுப்பினர்களுக்கு 14 சதவீதம் லாப பங்கீடு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்துக்கு 2016-17ம் ஆண்டுக்கு லாபமாக ரூ.93 லட்சம் ஈட்டப்பட்டதற்கும், கடன் தொகை, லாப பங்கீடு மற்றும் அனைத்து தொகைகளுக்கும் இசிஎஸ் மூலம் வங்கிகளுக்கு அனுப்பப்படுவதையும் உறுப்பினர்கள் பாராட்டினர். நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.