தேனி, நவ. 8: தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளில் 1 லட்சத்து 81 ஆயிரம் தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.47 கோடியே 99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் கூறியதாவது: தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 7 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகையாக 1 லட்சத்து 72 ஆயிரத்து 207 தொழிலாளர் குழந்தைகளுக்கு ரூ.33 கோடியே 50 லட்சத்து 82 ஆயிரத்து 366ம், திருமண உதவித் தொகையாக 1914 பேருக்கு ரூ.67 லட்சத்து 1 ஆயிரத்து 516 ம், மகப்பேறு உதவித் தொகையாக 614 பேருக்கு ரூ.32 லட்சத்து 90 ஆயிரத்து 300ம், கண்கண்ணாடி வாங்க உதவித்தொகையாக 1638 பேருக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 820ம் வழங்கப்பட்டுள்ளது.