பழனிசெட்டிபட்டியில் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

தேனி, நவ. 8: டெங்கு ஒழிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி அருகே பழனிசெட்டிபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியை லதா தலைமை வகித்தார்.

 பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி டெங்கு குறித்து விளக்கி பேசினார்.மேலும், பள்ளி மாணவ, மாணவியர் கை,கால்களை சுத்தமாக கழுவுவது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தார்.

இதில் வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: