ஊரக வளர்ச்சித்துறை சங்க விழா

காளையார்கோவில், நவ.8: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சங்க கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஒன்றிய செயலாளர் பெனடிக்ட் மைக்கேல் தலைமை தாங்கினார்.

 மாவட்ட தலைவர் வேலுச்சாமி, மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் கல்வெட்டை திறந்துவைத்தார்.

மாவட்ட தணிக்கையாளர் ஆரோக்கியம் கொடியேற்றி வைத்தார். மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்டத்தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியத் தலைவர் கணேசன், பொருளாளர் பாண்டியராஜன் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்த கொண்டார்கள்.

Related Stories: