காவல்காரன்பட்டியில் முதலமைச்சரின் காப்பீடு திட்ட சிறப்பு கருத்தரங்கம்

தோகைமலை, நவ.8: தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் முதலமைச்சரின் காப்பீடு திட்ட சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை சார்பில் காவல்காரன்பட்டி சமுதாயக்கூடத்தில் நடந்த இந்த சிறப்பு கருந்தரங்கிற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். ஊர்கவுண்டர் குப்பாயி, ராமசாமி, பிடிஏ தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலையரசன், தொழில் அதிபர் காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் சாந்திவனம் மனநல காப்பக இயக்குநர் அரசப்பன், ஊராட்சி செயலாளர் கலியராஜ், கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: