புழல் சிறையில் ரவுடியிடம் செல்போன் பறிமுதல்

சென்னை: சென்னை புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில் நேற்று முன்தினம் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கைதி கழிவறையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, கூடுவாஞ்சேரி நெடுங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா (28) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு செல்போன், சார்ஜர், சிம் கார்டு, பேட்டரி போன்றவற்றை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புழல் போலீசில் ஜெயிலர் உதயகுமார் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

Related Stories: