மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஆவடி, நவ.8: ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையில் புதிதாக ஒரு கம்பெனி கட்டப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக தேவதாஸ் என்பவர் உள்ளார். இந்த கம்பெனியின் கட்டிட பணியில் காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் (38) என்பவர் பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் பஞ்சநாதன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நீளமான இரும்புக் கம்பியை தூக்கி உள்ளார். அப்போது, அந்த கம்பி மேலே சென்ற மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி பஞ்சநாதன் இறந்தார். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் தேவதாசிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: