வாலிபருக்கு அரிவாள் வெட்டு சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது

துரைப்பாக்கம், நவ.8: வாலிபரை அரிவாளால் வெட்டி 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை திருவான்மியூர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராம் (23). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் இரவு ராம், தனது வீட்டு வாசலில், நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த திருவான்மியூர் ரங்கராஜபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் மது அருந்திவிட்டு போதையில் தகராறு செய்து கொண்டு வந்தனர்.ராமை பார்த்ததும் அவர்கள், அவரிடம் தகராறு செய்தனர். இதில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த வாலிபர்கள்,, ராமை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், ராமுக்கு தலையில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்த ராமை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்பேரில், திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரங்கராஜபுரத்தை சேர்ந்த சதீஷ் (19), விக்னேஷ் (18), சுதாகர் (18), பூபாலன் (28), அருண் (18) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.

Related Stories: