நாளை காஸ் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

காஞ்சிபுரம், நவ.8 :நாளை காஸ் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடத்த உள்ளதாக, வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து காஸ் நுகர்வோர்களுக்கும், ரீபில் பதிவு செய்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களிடம் ஏற்படும் காலதாமதம் ஆகிய குறைபாடுகளை களைய எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்த குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரால் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தவறாது கலந்துகொண்டு, தங்கள் குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: