தீபாவளி முடிந்தும் ஊழியர்கள் பணிக்கு வராததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது

ஈரோடு, நவ. 8:  ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

   இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்து அனைத்து அரசு துறை அலுவலங்கள் திறக்கப்பட்டது. ஆனால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும்பாலனோர் பணிக்கு திரும்பவில்லை.

இதனால் அலுவலகங்களில் குறைந்த அளவிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம், மாவட்டத்தில் 14 தாலுகா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு துறை அலுவலகங்கள் என அனைத்திலும் பணிக்கு வந்தவர்கள் எண்ணிக்ககை குறைவாக இருந்தது.

 ஊழியர் வராததால் அரசு அலுவலகங்களில் வெறிச்சோடி காணப்பட்டது. இதில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் பல்வேறு சான்றிதழ்கள், அதிகாரிகள் கையெழுத்து பெற வந்தவர்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர். இதனால் அரசு பணிகள் தேக்கமடைந்தன.

Related Stories: