2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி, நவ.8: கிருஷ்ணகிரி அருகே தின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னயன்(28). கூலி தொழிலாளியான இவரது மனைவி புஷ்பா(26). இவர்களுக்கு சுஜிதா(6) என்ற மகளும், பீனானந்த்(2) என்ற மகனும் உள்ளனர். சின்னயனுக்கும், புஷ்பாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள. இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி புஷ்பா தனது 2 குழந்தைகளுடன் வெளியில் சென்றார். ஆனால், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவின் தந்தை வெங்கடாசலம், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: