பாமக கொடியேற்று விழா

ஊத்தங்கரை, நவ.8: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி வன்னியர்நகர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அவர் கிராமத்தின் இரண்டு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சித்தார்த், அருள்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொகுதி அமைப்பு செயலாளர் ரங்கசாமி, திருமூர்த்தி, இளைஞரணி கிரி, பாலகிருஷ்ணன், முருகன், கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ், பூவரசன், அஜீத், சுந்தர், சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: