கிருஷ்ணகிரி, நவ.8: தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருப்போர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆலோசகர் நசீர்அகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ராஜா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வேலு வரவேற்றார். கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் பங்கேற்று பேசினார். மாவட்டத்தில் 56 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு 20 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இதில் 33,500 பேர் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து சீனியாரிட்டியில் உள்ளனர்.