கோயில் குளத்தில் விழுந்த சிறுமி பலி

கிருஷ்ணகிரி, நவ.8:  காவேரிப்பட்டணம் அருகே கோயில் குளத்தில் விழுந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கூரம்பட்டி குட்டியப்பன் நகரை சேர்ந்தவர் குமார் (35). இவரது மகள் பானு (10). கடந்த 5ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள சிவன்கோயில் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் குளத்தில் தவறி விழுந்தார். அங்கு யாரும் இல்லாதததால் சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: