நெல்லை, நவ. 8: நெல்லை மாவட்ட வண்ணார் சமுதாய முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். ஏஐசிசிடியு மாநில பொதுச்செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், சங்க நிர்வாகிகள் வெங்கடாசலபதி, மாரியப்பன், பேச்சிமுத்து, சங்கரசுப்பு, இசக்கிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.