நல்லம்மாள்புரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

தாழையூத்து, நவ. 8: தாழையூத்து அருகே உள்ள தென்கலம் ஊராட்சிக்குட்பட்ட நல்லம்மாள்புரம் கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மானூர் ஒன்றியம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மலேரியா அலுவலர் கருப்பசாமி தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜின்னா, சுகாதார ஆய்வாளர் தங்கராஜ், மானூர் பிடிஓ திருமலை முருகன், தாழையூத்து வருவாய் ஆய்வாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.

Related Stories: