தொழில்முனைவோருக்கு பயிற்சி

தூத்துக்குடி, நவ. 8:  தமிழக அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் தூத்துக்குடி துடிசியாவில் நடந்தது. இதில் திருவள்ளூர், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 28 பயனாளிகள் பங்கேற்றனர். நிறைவு நாளில் துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் சான்றிதழ் வழங்கினார்.    இதில், துடிசியா செயலாளர் ராஜ்செல்வின், பொருளாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: