தூத்துக்குடி, நவ. 8: தூத்துக்குடியில் நவம்பர் 13ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மின்பகிர்மான வட்டார மேற்பார்வை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் கோட்ட அளவில் செவ்வாய்க்கிழமை தோறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, நவம்பர் 13ம் தேதி தூத்துக்குடி நகர விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20ம் தேதி கோவில்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 27ம் தேதி தூத்துக்குடி ஊரக விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்திலும் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வுகாணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.