திருமலைராயன்பட்டினத்திற்கு நிரந்தர வருவாய் ஆய்வாளர்

காரைக்கால், நவ. 8:  காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நிரந்தர வருவாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் இயற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

திருமலைராயன்பட்டினம் கிளை சார்பிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமலைராயன்பட்டினம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகிகள் நிலவழகன், தமீம், ரவி, நாகமுத்து, ராஜேந்திரன், தமிழ்மணி, தமீம், ராதா

கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், திருமலைராயன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் கண்டிப்பாக மருத்துவர் மற்றும் உதவியாளர்களை நியமிக்கவேண்டும். திருமலைராயன்பட்டினத்தில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய சிறப்பு பொறியாளர்கள் குழுவை நியமிக்கவேண்டும். திருமலைராயன்பட்டினத்தில் நிரந்தர வருவாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டும். இல்லையேல், நியமிக்க வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: