லோடு கேரியர் டிரைவர், மனைவி உறவினர்களை தாக்கி மிரட்டல்

புதுச்சேரி,  நவ. 8: முத்தியால்பேட்டை சோலை நகரில் லோடு கேரியர் டிரைவர், மனைவி மற்றும்  உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மீனவரை போலீசார் கைது  செய்தனர். தலைமறைவான உறவினர்கள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

  புதுவை, முத்தியால்பேட்டை, சோலை நகரில் வசிப்பவர் குமார் (38), லோடு  கேரியர் டிரைவர். இவருக்கும், அவரது தங்கை, தம்பி குடும்பத்தாருக்கும்  இடையே நிலபிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

  இதனிடையே தீபாவளியையொட்டி குமார் தனது மனைவி மற்றும் மாமனார், மாமியாருடன்  வீட்டில் இருந்துள்ளார். அப்போது கல்லறை தோட்டம் பின்புறத்தில் அவரது  தங்கையின் கணவர் லிங்கேஸ்வரன், அவரது தாய்மாமா திங்கள்கொடி, தம்பி மனைவி  விஜி, நண்பர் ஜெயபிரதா உள்ளிட்டோர் குமார் உள்ளிட்ட 4 பேரையும் அசிங்கமாக  திட்டி உருட்டுக்கட்டை, இரும்பு பைப் மற்றும் கத்தியால் தாக்கியதோடு கொலை  மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகி

விட்டனர்.

 இதில் காயமடைந்த  குமாரின் மனைவி உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  இதுகுறித்து குமார் அளித்த புகாரின்பேரில் மீனவர் லிங்கேஸ்வரனை கைது செய்த  போலீசார் அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான  திங்கள்கொடி உள்ளிட்ட

3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

Related Stories: